×

ஜனநாயகக் கடமையை ஆற்ற போலீசார் கொடி அணிவகுப்பு

 

திருப்பூர், மார்ச்10:தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட தென்னம்பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் துணை ராணுவ படையினர் மற்றும் மாநகர போலீசாரின் கொடி அணிவகுப்பு நேற்று நடந்தது.

இந்த அணிவகுப்பு பொதுமக்கள் அச்சமின்றி தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற முன்வர வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துதல், தேர்தல் நேரத்தில் வன்முறையில் ஈடுபட முயலும் நபர்களுக்கும்,விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கும் ஒரு கடுமையான எச்சரிக்கையாக இது அமைந்தது. மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த கொடி அணிவிக்கும் நடத்தப்பட்டது.

Tags : Tiruppur ,Tamil Nadu Assembly ,Municipal Corporation ,Thennampalayam ,Tiruppur South ,
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்