சென்னை : மகிழ்ச்சியாக நம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள் என்று பொதுத் தேர்வு எழுதும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று பொதுத் தேர்வு எழுதவுள்ள 12ம் வகுப்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும். அன்பு மாணவர்களே பதற்றம் இல்லாமல் சந்தோஷமா Exam Hall-க்கு வாங்க. மகிழ்ச்சியாக நம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள். உங்களுக்கு துணையாக நாங்கள் இருக்கிறோம்.”இவ்வாறு தெரிவித்தார்.
