×

பொது மயானத்தை ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் பயன்படுத்த அனுமதி மறுப்பது தீண்டாமைக்கு சமம்: உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை: ஈரோடு மாவட்டம், கருமாண்டி செல்லிப்பாளையம் கிராமத்தில் உள்ள வண்டிப்பாதை நிலத்தை மயானமாக மாற்றக் கோரியும், மயானம் என்று வரையறுக்கப்பட்ட இடத்தில் உடலை அடக்கம் செய்வதை உறுதி செய்ய கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கருமாண்டி செல்லிபாளையத்தில் சர்ச்சைக்குரிய நிலம் வண்டிப் பாதைப் புறம்போக்கு என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், 70 ஆண்டுகளாக மயானமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அருந்ததியர் சமூகத்தினர் இந்த நிலத்தில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பயன்படுத்தி வருகின்றனர். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை பொதுவாக உள்ள மயானம் அல்லது தகனம் செய்யும் இடத்துக்கு செல்ல அனுமதி மறுப்பது குற்றம். இது, தீண்டாமையின் ஒரு வடிவமாகும். சம்பந்தப்பட்ட மயானம், எவ்வித ஆக்கிரமிப்பு அல்லது குப்பை கொட்டும் பகுதியாக மாறாமல் இருக்க தேவையான நடவடிக்கையை கருமாண்டி செல்லிபாளையம் சிறப்பு பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட கலெக்டர் எடுக்க வேண்டும். மயானத்தில் இருந்த கல்லறைகளை சேதப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags : Chennai ,Chellipalayam village ,Karumandi, Erode district ,Justice ,V. Lakshminarayanan.… ,
× RELATED சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வருகை!