சென்னை: ‘உலக அளவில் இருந்து பல நாடுகளின் தேர்தல் ஆணையர்கள் பங்கேற்ற கூட்டத்தில் குடவேலை முறை குறித்து கூறினேன். தமிழ்நாட்டின் ஜனநாயக பாரம்பரியத்தை கேட்டு அனைவரும் வியந்து பாராட்டினர். சிறப்பான ஜனநாயக பாரம்பரியத்தை கொண்ட மாநிலம் தமிழ்நாடு’ என செய்தியாளர் சந்திப்பில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார். மேலும் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையர் பாராட்டு தெரிவித்தார். வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
