திருச்சி, பிப். 3: புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப் பட்டிருந்தது.அதன்படி திருச்சி பழைய கலெக்டர் அலுவலக சாலையில் நேற்று காலை திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மாவட்ட தலைவர் விவேகானந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கலெக்டர் அலுவலக சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 117 பெண்கள் உள்பட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.