திருவனந்தபுரம் : வயநாடு நிலச்சரிவு பேரிடரில் வீடு, உடைமைகளை இழந்த 555 பேரின் வங்கிக் கடன்களாக ரூ.18.75 கோடியை கேரள மாநில அரசே திரும்பச் செலுத்த உள்ளது. வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய ஒன்றிய அரசு மறுத்த நிலையில், முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இந்தத் தொகை வங்கிகளுக்கு செலுத்தப்பட உள்ளது.
