கரூர், ஜன. 21: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்னாண்டாங்கோயில் பிரிவு அருகே குட்கா பொருட்கள் மறைத்து வைத்து விற்பனை செய்வதாக டவுன் போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சோதனை மேற்கொண்ட போது, அந்த பகுதியில் இருந்து 200 கிராம் எடையுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்து, மாரிமுத்து என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
