சென்னை : மெட்ரோ ரயில்களில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மற்றவர்கள் அமர்வதைத் தடுக்க திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருக்கைகள் ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை 30 நாட்களில் வகுக்க தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
