×

கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைபடி மெட்ரோ ரயில் இயக்கப்படும்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்

 

சென்னை: கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு மெட்ரோ ரயில் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைபடி இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடா்பாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு நாளை (டிச. 25), ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும். மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை கீழ்கண்ட கால இடைவெளியில் அடிப்படையில் இயங்கும்.

அதன்படி, பகல் 12 முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

Tags : Metro ,Christmas ,Chennai Metro Rail Administration ,Chennai ,Metro Railway Administration ,
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க,...