×

35 பேருக்கு வீடு தேடி பொருட்கள் விநியோகம்

பென்னாகரம், டிச.4: தாயுமானவன் திட்டத்தின் கீழ், ஊட்டமலை கிராமத்தில் 35 முதிய பயனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் பகுதியில், ஒகேனக்கல், ஊட்டமலை ஆகிய கிராமங்களில் 2 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஒகேனக்கல், சத்திரம், இந்திரா நகர், ஏரிக்காடு, ராணிப்பேட்டை, ஊட்டமலை, நாடார் கொட்டாய் ஆகிய பகுதி மக்கள், இந்த 2 ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி வருகின்றன. இந்நிலையில், தமிழக முதலமைச்சரால் வயதானவர்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டமான, தாயுமானவன் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஒகேனக்கல் ஊட்டமலை கிராம பகுதியில், உள்ள 2 கடைகளிலும் 35 பயனாளிகள், இந்த திட்டத்தின் மூலம் மாதம் தோறும் பயனைடந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதம் தோறும் வீடு தேடி விற்பனையாளர் தொல்காப்பியம், உதவியாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் அரிசி, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு, கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வழங்கினர்.

Tags : Bennagaram ,Ootomalai ,Okenakkal ,Bennagaram, Dharmapuri district ,Ootomalai… ,
× RELATED தாமிரபரணி அன்னைக்கு சிறப்பு வழிபாடு