சென்னை : சென்னை அண்ணா நகரில் 7 வயது மகனை கொடூரமாகக் கொலை செய்த தந்தை தலைமறைவு ஆகியுள்ளார். மனைவியும் கழுத்து அறுபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். ஐ.சி.எப். பணியாளரான நிவேதிதா (36) கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசு அதிகாரியான நவீன் கண்ணா, பங்குச்சந்தையில் பணம் இழந்ததால் இது தொடர்பான தகராறில் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
