×

கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

திருச்சி், டிச.24: திருச்சி கூனி பஜார் கோரிமேட்டை சேர்ந்தவர் கார்த்திக்(33). மீன் மார்க்கெட்டில் கூலித்தொழிலாளி. இவர் தினமும் குடித்துவிட்டு வருவதால், கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதே போல் நேற்று முன்தினம் கார்த்திக் குடித்துவிட்டு வந்ததால் கணவன், மனைவிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மன வேதனை அடைந்த கார்த்திக் வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து மனைவி விஜயா கொடுத்த புகாரின் பேரில், கோர்ட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Mercenary ,suicide ,
× RELATED தர்மபுரி அருகே இன்ஸ்டாகிராம்...