×

தர்மபுரி அருகே இன்ஸ்டாகிராம் காதலனின் மனைவி கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை: போலீஸ் விசாரணை


தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே பட்டவர்த்தி கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகள் சோபனா(26). இவருக்கும், ஈரோடு சென்னிமலை பழையபாளையத்தை சேர்ந்த மாதேஸ்வரன் மகன் மாணிக்கம்(30) என்பவருக்கும், கடந்த 5 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்கள் குடும்பமாக ஈரோட்டில் வசித்து வருகின்றனர். சோபனாவுக்கு டெய்லரிங்கில் ஆர்வம் இருந்துள்ளது. இதுதொடர்பாக, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுகளை போடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அதனை பார்த்த பட்டவர்த்தியை சேர்ந்த தமிழரசன் மகன் பிரசாந்த்(32) என்பவர் சோபனாவுடன் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளார். நாளடைவில் அவர்களுக்கிடையே நெருக்கம் ஏற்பட்டு, தகாத உறவாக மாறியது. பிரசாந்துக்கு திருமணமாகி மாயா என்ற மனைவி உள்ளார். கணவரின் தகாத உறவு பற்றி மாயாவுக்கு தெரியவந்தது. இதுபற்றி கணவரிடம் அவர் கேட்டுள்ளார். இந்நிலையில், கடந்த 14ம் தேதி, சோபனா பட்டவர்த்தியில் உள்ள தனது வீட்டுக்கு குடும்பத்துடன் வந்திருந்தார்.

இதனை அறிந்த மாயா, செல்போனில் தொடர்பு கொண்டு சோபனாவிடம் பேசி, தனது கணவருடன் தகாத உறவு வைத்துக்கொண்டு குடும்பத்தை நாசம் செய்வதாக கூறி, தகாத வார்த்தையால் திட்டியதாக தெரிகிறது. இதனால் மனவேதனையடைந்த சோபனா, கடந்த 16ம் தேதி விஷத்தை குடித்து விட்டு மயங்கினார். தர்மபுரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, நேற்று முன்தினம் சோபனா உயிரிழந்தார். இதுபற்றி ஏ.பள்ளிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

The post தர்மபுரி அருகே இன்ஸ்டாகிராம் காதலனின் மனைவி கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை: போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Instagram ,Dharmapuri ,Gunasekaran ,Pattavarthy village ,Paprirettipatti ,Dharmapuri district ,Sobana ,Matheswaran ,Manikam ,Chennimalai Old Palayam ,Erode ,Dinakaran ,
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...