செங்கல்பட்டு, செப்.18: செங்கல்பட்டில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நாளை (19ம்தேதி) காலை 10.30 மணியளவில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. அனைத்து விவசாயிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் வண்ணம் கலெக்டர் அலுவலகத்தில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் சினேகா தெரிவித்துள்ளார்.
