×

இனி விஜய் பற்றி என்கிட்ட கேட்காதீங்க… பிரேமலதா திடீர் கோபம்

நெல்லை: இனி விஜய் பற்றி என்கிட்ட எதுவும் கேட்காதீங்க என்று நெல்லையில் பேட்டியளித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கோபமாக தெரிவித்தார். நெல்லை வந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று அளித்த பேட்டி: நாடு முழுவதும் வாக்கு திருட்டு நடந்து கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தில் வாக்கு திருட்டு நடப்பது இப்போதுதான் தெரிய வந்துள்ளது. தேர்தலிலும் துஷ்பிரயோகம் நடக்கிறது. தேர்தல் ஆணையமும் நீதிபதிகளும் இணைந்து ஜனநாயக நாட்டில் முறையாக தேர்தலை நடத்த வேண்டும். அப்போதுதான் தேர்தலில் நிற்பதற்கும், தேர்தலில் போட்டியிடுவதற்கும் வழிவகை கிடைக்கும். கண்கூடாக வாக்குக்கு காசு கொடுப்பது தெரிகிறது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பீகார் மட்டுமல்ல இந்தியா முழுவதும் சீர்திருத்தம் வரவேண்டும். சட்டமன்றத் தேர்தல் நடத்துவதற்கு 9 மாதம் உள்ளது. கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் நாள்தோறும் பத்திரிகையாளர்களை சந்திக்கிறோம். விஜய் குறித்த கேள்வியை தவிர்த்து மற்ற கேள்விகள் என்னிடம் கேட்பதில்லை. விஜய் குறித்தும் கூட்டணி குறித்தும் இனி என்னிடம் எந்த கேள்வியும் கேட்க வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Vijay ,Premalatha ,Nella ,Demutika Secretary General ,Demutika General Secretary ,
× RELATED யார் களத்தில் இருக்கிறார்கள் என்பதை...