- முதல்வர்
- எம். யு. கே. திடீரென
- ஸ்டாலின்
- கேவின்
- சென்னை
- தலைமை நிர்வாக அதிகாரி
- தலைமை செயலகம்
- கே. நேற்று
- விடுதலை சிறுத்தை கட்சி
- திரு.
- மஹலவன்
- திருமாவளவன்
சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திடீர் என சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது கவின் தந்தையும் உடனிருந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது, சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆணவ கொலை செய்யப்பட்ட கவின் தந்தை சந்திரசேகர் உடனிருந்தார்.
முதல்வரை சந்தித்துவிட்டு வந்த திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது: கவின் தந்தை சந்திரசேகருடன் முதல்வரை சந்தித்து பேசினோம். அவர்களது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். கவின் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். கவின் கொலையில் கூலிப்படைக்கும் தொடர்பு உள்ளது என கவின் தந்தை முதல்வரிடம் கூறியுள்ளார். தனது இளைய மகளுக்கு அரசு வேலை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். கோரிக்கைகளை நிறைவேற்ற முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். பள்ளி ஆசிரியையாக உள்ள கவின் தாயாருக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் வசிக்கும் பகுதியிலேயே வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என கூறியுள்ளோம்.
ஆணவக் கொலை தடுப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மாநில அரசுக்கு அந்த அதிகாரம் உண்டு. கல் உடைக்கும் தொழிலாளர் வாரியம் அமைக்க விசிக சார்பில் முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். தூய்மைப்பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ஏற்கனவே நாங்கள் கோரிக்கை விடுத்து விட்டோம். ஆனால் அந்த தொழில் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான தொழிலாகவே அது நிரந்தரப்படுத்திவிட கூடாது என்பதற்காகவே அதை இயந்திரமயமாக்க வேண்டும் என்று கூறினேன். தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி யாரும் அந்த தொழிலை செய்யலாம் என்ற சூழலை உருவாக்க வேண்டும். அதை தவறாக புரிந்துகொண்டு, நான் தூய்மைப்பணியாளர்களுக்கு எதிராக பேசியதை போல் சிலர் விமர்சிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
