×

தஞ்சை மாவட்டத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் 510 மனுக்கள் குவிந்தன

 

தஞ்சாவூர், ஆக. 19: தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 510 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர். இம்மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

Tags : Tanji district ,Thanjavur ,Aga ,Public Grievance Resolution Day ,Tanji ,District Collector ,Office ,Priyanka Bankam ,
× RELATED தாமிரபரணி அன்னைக்கு சிறப்பு வழிபாடு