×

தஞ்சையில் இருந்து கன்னியாகுமரிக்கு 2500 டன் அரிசி மூட்டைகள் அனுப்பி வைப்பு

தஞ்சாவூர், ஆக 6: தஞ்சையில் இருந்து கன்னியாகுமரிக்கு 2500 டன் அரிசி மூட்டைகள் பொது விநியோகத் திட்டத்திற்காக சரக்கு ரயிலில் நேற்று அனுப்பி வைப்பு தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரெயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த நெல் அரவை செய்யப்பட்டு, பொது வினியோகத்திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2500 டன் அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் சரக்கு ரயிலில் 2500 டன் அரிசி மூட்டைகள் 42 வேகங்களில் ஏற்றப்பட்டு கன்னியாகுமரிக்கு பொது விநியோக திட்டத்திற்காக நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

 

Tags : Thanjavur ,Kanyakumari ,Thanjavur district ,Tamil Nadu ,
× RELATED தாமிரபரணி அன்னைக்கு சிறப்பு வழிபாடு