ஜார்க்கண்டின் ஹசாரிபாக் நகரில் உள்ள ஓயாசிஸ் பள்ளியில் இருந்து வினாத்தாள் கசிந்தது தொடர்பாக பள்ளியின் முதல்வர் எசானுல் ஹக், துணை முதல்வர் இம்தியாஸ் ஆலம் ஆகியோரை சிபிஐ கைது செய்தது. இவர்கள் இருவருக்கும் முறைகேட்டில் உதவியதாக முகமது ஜமாலுதீன் என்ற இந்தி நாளிதழ் பத்திரிகையாளரை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
இதற்கிடையே நீட் தேர்வு வினாத் தாள் கசிவு தொடர்பாக குஜராத்தில் 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். ஜெய் ஜலாராம் பள்ளியில் நடந்த சோதனையை தொடர்ந்து 4 பேரை சிபிஐ கைது செய்தது. இவ்வாறாக நீட் முறைகேடு தொடர்பாக பலரை சிபிஐ கைது செய்துள்ளதால், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
The post நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் இந்தி நாளிதழ் நிருபர் கைது: ஜார்கண்ட்டில் சிபிஐ அதிரடி appeared first on Dinakaran.