இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘இந்த தேர்தல் 2 சித்தாந்தங்களுக்கு இடையேயான மோதல். ஒரு பக்கம் இந்தியாவை எப்போதும் ஒன்றிணைக்கும் காங்கிரஸ் உள்ளது. மறுபுறம் எப்போதும் மக்களை பிரிக்க முயற்சிப்பவர்கள் உள்ளனர். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது ஆங்கிலேயர்கள் பக்கம் நின்றது யார்? காங்கிரஸ் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட போது, நாட்டைப் பிளவுபடுத்திய சக்திகளுடன் சேர்ந்து மாநிலங்களில் ஆட்சியை நடத்தியது யார்? எனவே, அரசியல் களத்தில் பொய் பேசுவதன் மூலம் எந்த வரலாறும் மாறிவிடாது. நாட்டை பிளவுபடுத்த நினைத்த சக்திகளுடன் கைகோர்த்து அவர்களை வலுப்படுத்தியவர்கள் யார் என்பதற்கு வரலாறே சாட்சி’’ என கூறி உள்ளார்.
The post மோடியின் பொய்களால் வரலாறுகள் மாறி விடாது: பாஜ விமர்சனத்திற்கு ராகுல் பதிலடி appeared first on Dinakaran.