ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தமே மணிப்பூரை எரித்தது அவர்களுக்கே தெரியும்: பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானி பேச்சுக்கு ராகுல்காந்தி பதிலடி

டெல்லி: அதிகாரத்திற்காக பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் மணிப்பூர் மட்டுமல்லாது தமிழ்நாடு உள்பட மொத்த நாட்டையே தீக்கிரையாக்கி விடும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார். மணிப்பூர் எரிய ராகுல் காந்தியே காரணம் என்று நேற்று மாநிலங்களவையில் பேசிய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டினார். மணிப்பூர் சம்பவம் குறித்து பெண் அமைச்சர்கள் பேச தயாரா என்று தேசியவாத காங்கிரஸ் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு இந்த குற்றச்சாட்டை ஸ்மிருதி இரானி ஆவேசமாக முன் வைத்தார். இவரது பேச்சு கடும் விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில்;

அதற்கு பதில் அளித்துள்ள ராகுல் காந்தி ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தமே மணிப்பூரை எரித்தது அவர்களுக்கே தெரியும் என்று கூறியிருக்கிறார். அதிகாரத்திற்காக மணிப்பூர் மட்டுமல்லாது தமிழ்நாடு, ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட மொத்த நாட்டையும் பாஜவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தீக்கிரையாக்கும் என்று ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிகாரத்திற்காக அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மொத்த நாட்டையே பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு விற்று விடும் என்று ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். நாடு துன்பப்பட்டால் எல்லோரும் துன்பப்படுவோம் என்று கூறிய ராகுல், ஆனால் பாஜகவினருக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கும் அந்த உணர்வே இருக்காது என்றும் விமர்சித்துள்ளார். இவர்கள் நாட்டை பிளவுப்படுத்தவே வேலை செய்கிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

The post ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தமே மணிப்பூரை எரித்தது அவர்களுக்கே தெரியும்: பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானி பேச்சுக்கு ராகுல்காந்தி பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: