சோதனை நடந்த இடங்களில் ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், சவிதா மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவ கல்லூரி, பல்நோக்கு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ குழுமங்களின் நிறுவனராகவும், வேந்தராகவும் இருப்பவர் டாக்டர் வீரய்யன். இவருக்கு சொந்தமாக காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் பகுதியில் உள்ள மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ குழுமங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரையடுத்து இந்த சோதனை நடந்தது.
ஈரோடு சம்பத் நகரில் உள்ள சவிதா மருத்துவ குழுமங்களின் நிறுவனர் டாக்டர் வீரய்யனுக்கு சொந்தமான வீடு மற்றும் வீட்டின் கீழ் பகுதியில் உள்ள எம்எம் இந்தியா மெடிக்கல் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திலும் நேற்று ஈரோடு, கோவையை சேர்ந்த வருமான வரித்துறையை சேர்ந்த 6 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். டாக்டர் வீரய்யன் பல ஆண்டுகளுக்கு முன்பே சம்பத் நகரில் உள்ள வீட்டை காலி செய்துவிட்டு சென்னையில் குடியேறிவிட்ட நிலையில், பழைய வீடு என்பதால் ஆவணங்கள் ஏதாவது வைக்கப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகின்றது. இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. சோதனை முடிவிற்கு பிறகு தான் முழு விபரங்கள் தெரிவிக்கப்படும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மருத்துவக் கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் என தமிழ்நாட்டில் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை: பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது appeared first on Dinakaran.