இந்நிலையில், மேயர் கல்பனா மீது கட்சியினர் அளித்த புகார்கள் குறித்து அவரை நேரில் அழைத்து திமுக தலைமை விசாரித்ததாக கூறப்படுகிறது. கடந்த 4 நாட்களாக சென்னையில் இருந்த கல்பனா, இன்று கோவை திரும்பிய நிலையில், மேயர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை கோவை மாநராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் கல்பனா வழங்கினார். இதையடுத்து, கோவை மாநகராட்சிக்கு புதிய மேயர் விரைவில் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே கோவை மேயர் கல்பனா தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்ததாக, கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார். கோவை மேயரைத் தொடர்ந்து நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் ராஜினாமா செய்துள்ளார். மேயராக சரவணன் பதவியேற்றதிலிருந்து அவருக்கு எதிராக திமுகவின் உறுப்பினர்களே நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்திருந்தனர். மேலும், தொடர்ச்சியாக சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே செயல்பட்டு வந்த நிலையில் சரவணன் ராஜினாமா செய்துள்ளார்.
The post மேயர்கள் அடுத்தடுத்து ராஜினாமா.! கோவை மேயரை தொடர்ந்து நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் ராஜினாமா appeared first on Dinakaran.