திருமலை: ஆந்திர மாநிலம் ஏளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் செயல்படும் அரசு பள்ளியில் படித்து வந்த அதே கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி கடந்த 15ம் தேதி மதிப்பெண் சான்றிதழ் வாங்குவதற்காக பள்ளிக்கு சென்றார். பள்ளியில் யாரும் இல்லாததால் வீடு திரும்ப முயன்றார். அப்போது அந்த மாணவியுடன் படிக்கும் சக மாணவன் ஒருவன் அங்கு வந்து மாணவியிடம் பேசியபடியே வகுப்பறைக்கு அழைத்து சென்றுள்ளார். வகுப்பறையில் அதே கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் இருந்தனர்.
அப்போது வகுப்பறைக்குள் மாணவியை திடீரென மாணவன் இழுத்து சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டார். இருப்பினும் வகுப்பறைக்குள் இழுத்துச்சென்று மாணவியை, அந்த மாணவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை 4 கல்லூரி மாணவர்களும் வீடியோ எடுத்துள்ளனர். பின் மாணவியின் பெற்றோரிடம் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிவாட்ஸ் அப்பில் பலாத்கார காட்சிகளை வைரலாக்கி உள்ளனர். இதுதொடர்பான புகாரில் 10ம் வகுப்பு மாணவன் மற்றும் வீடியோ எடுத்து மிரட்டிய கல்லூரி மாணவர்கள் உட்பட 5 பேரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.
The post `மார்க் லிஸ்ட்’ வாங்க பள்ளிக்கு சென்றபோது வகுப்பறையில் மாணவியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த மாணவர்கள்: ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல் appeared first on Dinakaran.