கூடுதல் வரதட்சணை தராததால் மனைவியின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றிய கொடூரன் கைது

திருவனந்தபுரம்: கேரளாவில் கூடுதல் வரதட்சணை கொடுக்காததால் மனைவியின் நிர்வாண வீடியோக்களை ஆபாச இணையதளத்தில் வெளியிட்ட கணவனை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள பகுதியை சேர்ந்த 33 வயதான ஆண் ஒருவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர், கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை அடித்து துன்புறுத்தி வந்து உள்ளார். இதற்கு அவரது குடும்பத்தினரும் உடந்தையாக இருந்துள்ளனர்.
இதற்கிடையே அந்த வாலிபருடைய மனைவியின் நிர்வாண வீடியோக்கள் ஒரு ஆபாச இணையதளத்தில் வெளியானது.

இந்த தகவல் அறிந்ததும் இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், ஆபாச வீடியோக்களை பகிர்ந்தது இளம்பெண்ணின் கணவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மனைவியின் குடும்பத்தினர் கூடுதல் வரதட்சனை தராததால் அவர்களை பழி வாங்குவதற்காக மனைவியின் நிர்வாண வீடியோக்களை ஆபாச இணையதளத்தில் வெளியிட்டதாக அவர் போலீசிடம் தெரிவித்துள்ளார்.

The post கூடுதல் வரதட்சணை தராததால் மனைவியின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றிய கொடூரன் கைது appeared first on Dinakaran.

Related Stories: