அதனை வாங்கி சோதனை செய்தபோது அந்த பேனா மூலம் ஒரே பர்மிட்டில் எத்தனை முறை வேண்டுமானாலும் தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை எழுதி எளிதாக அழிக்கும் வசதியுடன் அந்த பேனா தயாரிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இந்த பேனா மூலம் ஒருமுறை எழுதிய பின் ஊதுபத்தியை பற்ற வைத்து அந்த அனலை எழுத்துக்களின் மீது கொண்டு சென்றால் எழுதப்பட்ட எழுத்துக்கள் தானாக அழிந்து விடுகின்றன. இது குறித்து தகவல் அறிந்ததும் சுல்தான்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது போலி பர்மிட் மற்றும் மேஜிக் பேனாவை பறிமுதல் செய்தனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
The post மேஜிக் பேனாவால் திருத்தம்; போலி பர்மிட்டுடன் கிராவல் மண் கடத்திய வாகனங்கள் சிறைபிடிப்பு: கோவை அருகே பரபரப்பு appeared first on Dinakaran.