புதுச்சேரி, டிச. 4: புதுச்சேரி மாநில காங்கிரஸ் மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் இன்று(4ம் தேதி) புதுச்சேரி வருகிறார். 2 நாள் முகாமிடும் அவர், கட்சி நிர்வாகிகளுடன் சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகம், புதுவையில் சட்டமன்ற பொதுத்தேர்தல் ெநருங்கிவரும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, பிரசார கூட்டங்கள் உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் இப்போதே முனைப்பு காட்டி வருகின்றன. காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி 1ம்தேதி ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே நேற்று முன்தினம் தமிழகம் வந்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது ராகுல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமென அவருக்கு அழைப்பு விடுத்தார். இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் பணிகள் சம்பந்தமாக புதுச்சேரி மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசிக்க அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இன்று (4ம் தேதி) காலை சென்னையில் இருந்து புதுச்சேரி வருகிறார்.