பொன்னேரியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

பொன்னேரி: வழக்கறிஞர் சங்கம் சார்பில் நீதிமன்ற வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவரது திருவுருவப்படத்தை எடுக்க வேண்டும் என்ற உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதை நிறைவேற்றும்படி சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் தமிழகமெங்கும் மாவட்ட நீதிமன்றங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அந்த சுற்றறிக்கையை திரும்பப்பெறக்கோரி பொன்னேரி வழக்கறிஞர்கள் சங்கம் நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதைத்தொடர்ந்து தினமும் சுற்றறிக்கையை திரும்பப்பெறும் வரை பல்வேறு வகைகளில் போராட்டம் தொடரும் என வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் நெடுஞ்செழியன் தெரிவித்தார். இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

The post பொன்னேரியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: