மறைந்த சரஸ்வதி அம்மாளுக்கு பொதுமக்கள் அஞ்சலி

 

சிவகங்கை, மே 18: சிவகங்கை மாவட்டம் பச்சேரி கிரமத்தை சேர்ந்தவரும், மேலூர் அருள்மிகு கள்ளழகர் பாலிடெக்னிக் கல்லூரி நிறுவனர் சி.ரெத்தினம்பிள்ளை மனைவியும், சி.ஆர்.சுந்தரராஜன், சி.ஆர்.பாத்திபன், சி.ஆர்.வெங்கடாசலம், சி.ஆர்.பாலு, சி.ஆர்.நாகேந்திரன் ஆகியோரின் தாயாருமான ரெ.சரஸ்வதி அம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு, திருப்பாச்சேத்தி அருகே உள்ள பச்சேரி கிராமத்தில் நேற்று நடந்தது.
முன்னதாக சரஸ்வதி அம்மாள் உடலுக்கு முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியினர், கிராம பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

The post மறைந்த சரஸ்வதி அம்மாளுக்கு பொதுமக்கள் அஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: