நிறுவனங்கள் தொழிலாளர் நல நிதியினை இணைய வழியாக செலுத்துவதற்கு வசதியாக வலைத்தளம் lwmis.lwb.tn.gov.in உருவாக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலமாக தொழிலாளர் நல நிதியினை செலுத்தி உடனடியாக ரசீதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எனவே, இவ்வசதியை பயன்படுத்தி வேலையளிப்போர் தங்கள் நிறுவனங்களை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து கொள்ளுமாறும் 2024ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதி, கொடுபடாத் தொகை போன்றவற்றை இணைய வழியாக செலுத்திடுமாறும் கேட்டுக் கெள்ளப்படுகிறது. வாரியத்தில் ஏற்கனவே பதிவு செய்துள்ள நிறுவனங்களும் வலைத்தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
The post தொழிலாளர் நல நிதியை இணைய வழியில் செலுத்த வசதி: வாரியம் தகவல் appeared first on Dinakaran.