கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு வரும் 17ம் தேதி விடுமுறை

சென்னை: கோயம்பேடு காய்கறி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஜி.டி.ராஜசேகரன் கூறியதாவது: பொங்கலை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி அங்காடி வியாபாரிகள் மற்றும் கூலிதொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல இருப்பதால், வரும் 17ம் தேதி காணும் பொங்கல் அன்று அனைத்து காய்கறி கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். மேலும், வரும் 17ம் தேதி பூ மார்க்கெட் வழக்கம்போல் செயல்படும் என்று பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜும், பழ மார்க்கெட் வழக்கம்போல் இயங்கும் என பழ மார்க்கெட் தலைவர் சீனிவாசனும் தெரிவித்தனர்.

The post கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு வரும் 17ம் தேதி விடுமுறை appeared first on Dinakaran.

Related Stories: