காங். எம்.பி., எம்எல்ஏக்கள் மீது வழக்கு

நாகர்கோவில், ஏப்.17: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து, குமரி மாவட்டத்தில் 3 இடங்களில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நேற்று முன்தினம் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற விஜய் வசந்த் எம்.பி., பிரின்ஸ் எம்.எல்.ஏ., ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. உள்பட 358 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரயில் செல்ல விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகள் வருவதால் கடுமையான நடவடிக்கை இருக்கும் என ரயில்வே பாதுகாப்பு படை போலீசார்தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ராகுல்காந்தி எம்பி பதவி பறிப்பு கண்டித்து திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் போளூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற எம்பி எம்.கே.விஷ்ணுபிரசாத் உட்பட 50 பேரை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

The post காங். எம்.பி., எம்எல்ஏக்கள் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: