இந்த நிலையில் கொலை தொடர்பாக, உபி மாநிலம் பரேலியை சேர்ந்த தர்மேந்திரா என்பவனை ராஜஸ்தானில் போலீசார் கைது செய்தனர். போலீசார் கூறுகையில்,‘‘நர்ஸ் பணி முடிந்து வீடு திரும்பும் போது தர்மேந்திரா அவரை பின் தொடர்ந்து சென்றார். ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் அவரை இழுத்து சென்றார். பின்னர் சால்வையால் கழுத்தை நெரித்தார்.
இதில் அவர் கீழே மயங்கி விழுந்தார். அப்போது அவரிடம் இருந்த பணத்தை எடுத்துள்ளார். அதன் பின்னர் நர்சை பலாத்காரம் செய்து விட்டு கல்லால் தலையில் தாக்கி உள்ளார். இதில் அந்த பெண் துடிதுடித்து உயிரிழந்துள்ளார்’’ என்றனர். கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உபியில் நர்ஸ் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post கொல்கத்தாவை போன்று உபியிலும் ஒரு சம்பவம் நர்ஸ் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை: ராஜஸ்தான் மாநிலத்தில் கொலையாளி கைது appeared first on Dinakaran.