இதை அடுத்து மவுண்ட் போக்குவரத்து புலனாய்வு குழு போலீசார் சம்பவ இடம் விரைந்து உடலை மீட்டு உடற்கூராய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக உயிரிழந்த மாணவர் விருகம்பாக்கம் கிருஷ்ணா நகர் 6வது பிரதான சாலை பகுதியை சேர்ந்த சாமுவேல் ராஜ்(24) என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டது எந்த காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து மவுண்ட் போக்குவரத்து புலனாய்வு போலீசார் தற்போது தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை செய்ததால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.