இந்நிலையில் நேற்று கெடார் பகுதியில் பெய்த மழையால் விவசாய நிலங்களில் மழை வெள்ளம் ஏற்பட்டு கெடார்-செல்லங்குப்பம் சாலையில் கெடார் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி பழனியம்மாள் (39) என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் கோழி பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த சுமார் 4,800 கோழிகள் உயிரிழந்ததாக கோழிப்பண்ணையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கோழிகளை கால்நடை மருத்துவரை வரவழைத்து பரிசோதனை செய்தனர்.
The post கெடார் பகுதியில் பலத்த மழை கோழி பண்ணையில் மழை வெள்ளம் புகுந்து 4,800 கோழிகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.