வேலூர்: கன்னியாகுமரியின் வியாபாரத்தை பிரதமர் மோடி ஸ்தம்பிக்க வைத்துள்ளார் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; காந்தி குறித்து பிரதமர் மோடி பேசியதை நான் எதிர்பார்க்கவில்லை.
குஜராத்தை சேர்ந்த மோடி, காந்தியை படம் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று சொல்வதா?. காந்தியின் மீதுள்ள வன்மத்தையே பிரதமர் மோடியின் பேச்சு வெளிக்காட்டுகிறது. கன்னியாகுமரியின் வியாபாரத்தை பிரதமர் மோடி ஸ்தம்பிக்க வைத்துள்ளார். காவிரி விவகாரத்தில் கர்நாடகா பேசுவது வெட்டி வீர வசனம். முல்லை பெரியாறாக இருந்தாலும், காவிரியாக இருந்தாலும் ஒரு செங்கல்லை கூட வைக்க முடியாது என்றும் கூறினார்.
The post கன்னியாகுமரியின் வியாபாரத்தை பிரதமர் மோடி ஸ்தம்பிக்க வைத்துள்ளார்: அமைச்சர் துரைமுருகன் appeared first on Dinakaran.