×

தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, கலைஞர் நினைவு நாணயம் வெளியிட ஒன்றிய அரசு அனுமதி!

டெல்லி: தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, கலைஞர் நினைவு நாணயம் வெளியிட ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரான திமுகவின் தலைவருக்காக ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் எம்.கருணாநிதி’ என்ற பெயரில் ஒரு நினைவு நாணயம் வெளியிட தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. இதற்காக, ரூ.100 மதிப்பில் நினைவு நாணயம்வெளியிடும்படி மத்திய நிதியமைச்சகத்திடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு சார்பில் கடந்த வருடம் கோரப்பட்டிருந்தது.

இந்நாணயத்தை, கடந்த ஜுன் 3-ல் முடிந்த கலைஞர் கருணாநிதியின் நூறாவது பிறந்தநாளில் வெளியிடத் திட்ட மிடப்பட்டிருந்தது. பல்வேறு காரணங்களால் இந்த நாணயம் குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாமல் இருந்தது. இதன் பின்னணியில் நாணயத்திற்கான நடைமுறைகள் முடிவடையாதது காரணமானது. தற்போது இவை அனைத்தும் முடிந்து நேற்று நாணயத்திற்கான அனுமதியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கையெப்பம் இட்டதாகத் தெரிகிறது.

தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, முன்னாள் முதலமைச்சர் ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர்’ டாக்டர் மு.கருணாநிதி என்ற பெயரில் நினைவு நாணயம் வெளியிட ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆங்கிலம் மற்றும் இந்தியில் அவரின் பெயருடன் ‘தமிழ் வெல்லும்’ என்ற வாசகம் இடம்பெற உள்ளது. இதற்கான உத்தரவு விரைவில் ஒன்றிய அரசின் கெஜட்டில் வெளியாக உள்ளது. இதற்கான மாதிரி வடிவத்தை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது

The post தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, கலைஞர் நினைவு நாணயம் வெளியிட ஒன்றிய அரசு அனுமதி! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,union government ,Delhi ,Tamil ,Nadu ,Dr. ,M. Karunanidhi ,DMK ,Chief Minister of ,
× RELATED நீதிபதிகள் நியமனம், ஓய்வூதியம்...