அதேபோல், தேர்வில் பங்கேற்றவர்களின் மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள் மற்றும் மதிப்பெண்கள் www.arasubus.tn.gov.in இணையதளத்தில் கடந்த 27ம் தேதி வெளியிடப்பட்டது. அந்தவகையில், எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 2024 பிப்.14ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு, ஓட்டுநர் நடைமுறை தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறவுள்ளது. கல்வித்தகுதி, வயது, சாதி, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உரிமம் மற்றும் உடல் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் மட்டுமே நடைமுறை தேர்வு மற்றும் நேர்காணலுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஓட்டுநர் உடன் நடத்துநர் தேர்வு தேர்ச்சியடைந்தவர்களுக்கு பிப்.14ம் தேதி நேர்காணல்: அரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் appeared first on Dinakaran.