ஆண்டுதோறும் நவம்பர் 23ம் தேதி தொடங்கும் இந்த திருமண சீசனையொட்டி முக்கிய நகரங்களில் விழாக்கள் களைக்கட்டியுள்ளன. டிசம்பர் 15ம் தேதியுடன் முடிவடையும் இந்த சீசனில் மட்டும் 38 லட்சம் திருமணங்கள் நடைபெற உள்ளதாகவும் அதன் மூலம் ரூ.4.74 லட்சம் கோடிக்கு வியாபாரம் நடைபெறும் என்றும் அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) கணித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 32 லட்சம் திருமணங்கள் நடந்துள்ளன. இதன் மூலம் நடந்த வர்த்தகத்தின் மதிப்பு ரூ.3.75 லட்சம் கோடியாக இருந்தது.
இந்தியாவில் இந்த ஆண்டு சராசரி திருமண செலவு ரூ.5 லட்சமாக இருக்கும். கோவா, ஜெய்ப்பூர், கேரளா மற்றும் சிம்லா ஆகியவை திருமணத்துக்கான பிரபலமான இடங்களாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த வருட திருமண சீசனில் சுமார் 7 லட்சம் திருமணங்கள் ரூ.3 லட்சம் பட்ஜெட்டிலும், 8 லட்சம் திருமணங்கள் ரூ.6 லட்ச பட்ஜெட்டிலும், ரூ.10 லட்ச பட்ஜெட்டிலும் 10 லட்சம் திருமணங்களும், ரூ.15 லட்ச பட்ஜெட்டிலும் 7 லட்சம் திருமணங்களும், ரூ.25 லட்ச பட்ஜெட்டிலும் 5 லட்சம் திருமணங்களும், ரூ.25 லட்ச பட்ஜெட்டிலும் 50 ஆயிரம் திருமணங்களும், 50,000 திருமணங்களுக்கு ரூ.1 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில் நசக்கும் என CAIT எதிர்பார்க்கிறது.
The post இந்தியாவில் அடுத்த 3 வாரங்களில் 38 லட்சம் திருமணங்கள்.. நாடு முழுவதும் ரூ.4.74 லட்சம் கோடி பிஸ்னஸ்..!! appeared first on Dinakaran.