இதையடுத்து மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் துவங்கியுள்ளது. இருகரைகளையும் தொட்டு தண்ணீர் ஓடுவதால் யானைக்கல் தரைப்பாலம், ஆழ்வார்புரம் தடுப்பணை, ஓபுளா படித்துறை, ஆரப்பாளையம் ஆகிய மதுரை வைகையாற்று கரையோர பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கரையோரங்களில் பொதுமக்கள் செல்லவோ, ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை மேய்க்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கை விழிப்புணர்வு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
The post தொடர் மழை, அணை திறப்பு எதிரொலி; வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு: மதுரை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.
