வன்னியர் சங்க கல்வெட்டு திறப்பு

மதுராந்தகம்: அச்சரப்பாக்கம் ஒன்றியம் மின்னல் சித்தாமூர் ஊராட்சியில் வன்னியர் சங்க கல்வெட்டு திறப்பு விழா நடைபெற்றது. இதில், முன்னாள் மாவட்ட செயலாளரும் மாநில உழவர் பேரியிக்க தலைவருமான எடையாளம் குமரவேல், மாநில செயற்குழு உறுப்பினர் அம்பலவாணன் ஆகியோரின் தலைமை தாங்கினார். மாநில வன்னிய சங்க தலைவர் தீரன் அருள்மொழி, முன்னாள் எம்எல்ஏ திருக்கச்சூர் ஆறுமுகம், மாநில வன்னியர் சங்க செயலாளர் பேராசிரியர் தீரன்ரவிராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கல்வெட்டை திறந்து வைத்தனர். இதில், மாநில வன்னியர் சங்க செயலாளர் ஏழுமலை, அச்சரப்பாக்கம் நகர செயலாளர் பக்கிரிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post வன்னியர் சங்க கல்வெட்டு திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: