தாராபுரத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தாராபுரம்.டிச.7: தாராபுரத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினமான நேற்று பாபர் மசூதியை இஸ்லாமியர்களிடம் திருப்பி வழங்க வலியுறுத்தியும்,மஸ்ஜிதை சட்டவிரோதமாக இடித்த குற்றவாளிகளுக்கு மத்திய அரசும், நீதித்துறையும் தண்டனை வழங்க கோரிக்கை விடுத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாராபுரத்தில் அண்ணா சிலை அருகே திருப்பூர் மாவட்ட செயலாளர் முஹம்மது இஸ்மாயில் தலைமையில் செயற்குழு உறுப்பினர் அஹமது கபீர் முன்னிலையில் மண்டலச் செயலாளர் ஜெயினுலாபுதீன் சிறப்புரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விவசாயிகள் பாதுகாப்பு இயக்க மாநிலத் துணைச் செயலாளர் முத்தமிழ் வேந்தன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ரகுபதி, ஆகியோர் கலந்து கொண்டு எஸ்டிபிஐ கட்சியின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: