எனவே, இந்த போட்டியை வேறு நாளில் நடத்த வேண்டும் என அகமதாபாத் காவல் துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இது குறித்து தீவிரமாக ஆலோசித்து வந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், இந்தியா – பாகிஸ்தான் மோதல் உள்பட மொத்தம் 9 போட்டிகளுக்கான அட்டவணையில் மாற்றம் செய்து புதிய அட்டவணையை நேற்று வெளியிட்டது. அதன்படி, இந்தியா – பாக். மோதும் ஆட்டம் ஒருநாள் முன்னதாக அக். 14ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. பாகிஸ்தான், இங்கிலாந்து, வங்கதேச அணிகளுக்கு தலா 3 போட்டிகளுக்கான தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post ஐசிசி உலக கோப்பை ஒருநாள் தொடர் இந்தியா – பாகிஸ்தான் அக். 14ல் மோதல்: 9 போட்டிகளின் அட்டவணையில் மாற்றம் appeared first on Dinakaran.