சைதை துரைசாமி மகன் வெற்றியை தேடும் பணியில் கடந்த 3 நாட்களாக அம்மாநில போலீசார், பேரிடர் மீட்பு படையினர், பழங்குடியின மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். விபத்துக்குள்ளான வாகனத்தின் சில பகுதிகள் கைப்பற்றப்பட்டது. ஒருவரின் உடல் பாகங்கள், மூளை உள்ளிட்ட உறுப்புகள் சிதைந்த நிலையில் கிடைத்துள்ளன. அவற்றை எடுத்து தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து இமாச்சல பிரதேசம் சென்றுள்ள சைதை துரைசாமி, மகன் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.1 கோடி சன்மானம் வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும், பழங்குடியின மக்களை சந்தித்து மகனை மீட்க உதவுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.
The post இமாச்சல் விபத்தில் பலியான சைதை துரைசாமியின் மகனின் மூளை பாகம் கிடைத்தது: தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.