தமிழ்நாட்டில் 9 இடங்களில் நேற்று கனமழை பதிவு

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 9 இடங்களில் கனமழை பெய்துள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி, ஏலகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணையில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வடபுதுப்பட்டு, ஆம்பூரில் தலா 8 செ.மீ. -மழை பெய்துள்ளது. வாணியம்பாடி, குமரி மாவட்டம் அடையாமடை, கள்ளக்குறிச்சி மாவட்டம் வேங்கூரில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் 9 இடங்களில் நேற்று கனமழை பதிவு appeared first on Dinakaran.

Related Stories: