சிகர நிகழ்ச்சியான சங்கரநாராயணராக கோமதி அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுக்கும் வைபவம் நேற்று நடந்தது. மதியம் 1.30 மணிக்கு கோமதி அம்பாள் தங்கசப்பரத்தில் கோயிலில் இருந்து புறப்பட்டு ரதவீதியில் உள்ள தபசு மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 5.30 மணிக்கு மேல் சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மாலை 7.29 மணிக்கு தபசு மண்டபத்தில் தவமிருக்கும் கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் முதல் காட்சி நடந்தது. தொடர்ந்து கோமதி அம்பாள், சிவலிங்கமாக காட்சி தர வேண்டும் என தபசுமண்டபத்தில் மீண்டும் எழுந்தருளினார். இதைதொடர்ந்து நள்ளிரவு 12.05 மணிக்கு சுவாமி சங்கரலிங்கமாக யானை வாகனத்தில் வந்து கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுத்தார். பின்னர் சுவாமி, அம்பாளை கோயிலுக்கு அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
The post அரியும் சிவனும் ஒன்று என உணர்த்தும் வைபவம்; சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.