அதனைத்தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், சுப்பிரமணியபுரம் 2வது வடக்கு குறுக்கு தெரு பகுதியில் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, அப்பகுதியில் எச்.ராஜா வீடு, வீடாக பிரசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. பிரசாரம் செய்யக்கூடாது என அறிவுறுத்திய பறக்கும் படையினருடன், எச்.ராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதிகாரிகள் அறிவுறுத்தியும் வீடு, வீடாக சென்று தொடர்ந்து பிரசாரத்தை செய்தார். இதனைத்தொடர்ந்து அவர் மீது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
The post தேர்தல் விதிமுறைகளை மீறி வீடு வீடாக சென்று எச்.ராஜா பிரசாரம்: அதிகாரிகளுடன் வாக்குவாதம் appeared first on Dinakaran.