2023ல் மட்டும் 4 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் குஜராத் அரசு கடந்த 2 ஆண்டுகளாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகளுக்கும் அனுமதி கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது. மற்றொரு கேள்விக்கு பதில் அளித்துள்ள குஜராத் பாஜக அரசு, கடந்த 2 ஆண்டுகளில் 507 தனியார் செவிலியர் கல்லூரிகளும் ஒரே ஒரு அரசு செவிலியர் கல்லூரியும் திறக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவக் கல்லூரியை உருவாக்கப்போவதாக குஜராத் மாநில பாஜக வாக்குறுதி அளித்து வரும் நிலையில், கடந்த 29 ஆண்டுகளாக அங்கு ஒரு அரசு மருத்துவக் கல்லூரி கூட திறக்கப்படவில்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
The post குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்த 1995க்கு பிறகு ஒரு அரசு மருத்துவக்கல்லூரி கூட திறக்கப்படவில்லை!! appeared first on Dinakaran.