கடந்த அதிமுக ஆட்சியில் குட்கா வியாபாரிகளிடம் மாமூல் பெற்ற விஜயபாஸ்கர், ரமணா மீது நடவடிக்கை எடுக்கக்கோரியதற்கு சட்டநிபுணர்களுடன் ஆலோசனையில் இருப்பதாக மழுப்பல் பதில் அளிக்கிறார். சட்டநிபுணர்களுடன் ஆலோசனை என்ற பெயரில் 10 மாதமாக கிடப்பில் போட்டுள்ளார். ” என்றார். முன்னதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அனுப்பிய கடிதத்துக்கு விளக்கம் அளித்துள்ள ஆளுநர் மாளிகை, முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்துள்ள வழக்கில், விசாரணை அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பாக எந்த குறிப்பும் அல்லது கோரிக்கையும் அரசிடம் இருந்து வரவில்லை என தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது.
The post ஆளுநர் மாளிகையில் இருந்து உண்மைக்கு புறம்பான செய்தி வெளியாகி வருகிறது: அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.