ஆளுநர் மாளிகைக்கு என அரசு ஒதுக்கும் நிதிகளுக்கு முறையாக கணக்குகள் வருவதில்லை: பேரவையில் நிதியமைச்சர் தகவல்

சென்னை: ஆளுநர் மாளிகைக்கு என அரசு ஒதுக்கும் நிதிகளுக்கு முறையாக கணக்குகள் வருவதில்லை என நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். பேரவையில் உரையாற்றிய அவர் ரூ.11 கோடிக்கு முறையாக கணக்குகள் இல்லை என தெரிவித்தார்.

ஆளுநர்களுக்கு செயலாக்கம், வீட்டு செலவு, Petty Grants ஆகிய 3 பிரிவுகளில் நிதி ஒதுக்கப்படுகிறது. மொத்த செலவு என்ற தலைப்பில் ரூ.18.30 கோடி ஆளுநர் மாளிகைக்கு வழங்கப்படுகிறது. இதில் ரூ.11.30 கோடி அவரது கணக்கு மாற்றப்பட்டு, முறையாக கணக்குகள் வருவதில்லை. இது விதிமுறை மீறல் என நிதியமைச்சர் கூறியுள்ளார்.

ஏழை, எளிய மக்களின் மருத்துவ செலவுகள், திருமண உதவி போன்றவற்றிற்காக செலவிட வேண்டிய நிதியை ஆளுநர் தவறாக பயன்படுத்தியுள்ளனர். உடனடியாக இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

The post ஆளுநர் மாளிகைக்கு என அரசு ஒதுக்கும் நிதிகளுக்கு முறையாக கணக்குகள் வருவதில்லை: பேரவையில் நிதியமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: